×

கோயில் விழாவில் தகராறு ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை

மதுரை:  மதுரையின் செல்லூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த மதுரைவீரன் மகன் பிரவீன் (எ) பல்செட் பிரவீன் (23). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. செல்லூர் மாரியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பிலிருந்த பிரவீன் மற்றொரு தரப்பை தாக்கினார். இதனால் ஆத்திரத்துடன் அங்கிருந்து அவர்கள் தப்பித்தனர்.
பின்னர் நேற்று இரவு 9 மணியளவில் பிரவீன் வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது தப்பித்துச் சென்ற கும்பலைச் சேர்ந்த 4 பேர் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பிரவீனை வழிமறித்தனர்.

ஆட்கள் நடமாட்டம் மிகுந்த அந்தப் பகுதியில் கும்பலிடம் இருந்து தப்பிக்கக் கருதிய பிரவீன் ஓடத் தொடங்கினார். ஆனால் கும்பல் விரட்டிச் சென்று பிரவீனை கத்தியால் சரமாரியாக குத்தியது. ரத்த வெள்ளத்தில் பிரவீன் துடிதுடித்து இறந்தார். அதன் பிறகு அந்த கும்பல் அங்கிருந்து மீண்டும் தப்பித்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செல்லூர் போலீசார் தப்பி சென்ற கும்பலை தேடி வருகின்றனர். மக்கள் மத்தியில் நடந்த இந்த கொடூர சம்பவம் மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தி  உள்ளது.   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Temple Festival, Disputation, Rowdy, Fleeing and Carnage
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...