×

காதலிக்கும்படி மிரட்டல் மாணவி தீக்குளிப்பு: பேஸ்புக் நண்பர் கைது

திருச்சி: காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று பேஸ்புக் நண்பர் மிரட்டியதால் இன்ஜினியரிங் கல்லூரி மாணவி தீக்குளித்தார். இதையடுத்து வாலிபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்தவர் சுமதி (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். அரியமங்கலம் பர்மா காலனியை சேர்ந்த வினோத்குமார் மகன் விஷால் (19). இருவரும் பேஸ்புக்கில் நண்பர்களாகினர். சுமதி மீது விஷாலுக்கு காதல் ஏற்பட்டது. அதை சுமதியிடம் விஷால் வெளிப்படுத்தினார். ஆனால் காதலை ஏற்க மறுத்துவிட்டார். எனினும், காதலை ஏற்குமாறு விஷால் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

ஒரு கட்டத்தில் காதலை ஏற்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று விஷால் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுமதி நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து விஷாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Threatened to fall in love, student immolation, Facebook friend, arrested
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்