×

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மாணிக்கம் நகர் சாலையின் இருபுறமும் பானிபூரி, சிக்கன் பகோடா, டிபன் கடை உள்பட பல்வேறு  கடைகள் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதனால், மாணிக்கம் நகர் சாலையோரத்தில்  வண்டிகளில் வைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இந்நிலையில், திருவொற்றியூர் 5வது வார்டு உதவி பொறியாளர் குணசேகரன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள், நேற்று காலை மேற்கண்ட  பகுதிக்கு சென்று, ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினர். மெரினா லூப் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மீன்கடை உள்பட  சுமார் 40க்கும் மேற்பட்ட கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக அகற்றினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...