×

அம்மா உணவகத்தில் லாரி மோதி விபத்து: அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் உயிர் தப்பினர்

திருவொற்றியூர்: அம்மா உணவகத்தில் கன்டெய்னர் லாரி மோதி, விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த ஊழியர்கள் உயிர் தப்பினர். திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரில் அம்மா உணவகம் செயல்படுகிறது. இங்கு, 7க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். காலை டிபன்,  மதிய உணவு, மாலை டிபன் என 3 வேளையும் விற்பனை நடக்கிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில், ஊழியர்கள் காலை  டிபனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சென்னை துறைமுகத்தில் உள்ள கன்டெய்னரை ஏற்றுவதற்காக எர்ணாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிரைலர் லாரி, திடீரென ஒரு  பைக் குறுக்கே சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் உள்ள அம்மா உணவகத்தின் நுழைவாயில் கேட்டில் மோதி நின்றது. இதில்,  லாரியின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. காம்பவுண்ட் சுவரும் இடிந்து விழுந்தது. டிரைவரின் சமார்த்தியதால், பெரும் சேதம் ஏற்படுவது  தவிர்க்கப்பட்டது. இதனால், அங்குள்ள ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதிகாலை நேரம் என்பதால், பொதுமக்களும் அங்கு இல்லை  என்பது குறிப்பிடத்தக்கது. புகாரின்படி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...