×

சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து வசதி : ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் மற்றும் திருவள்ளூர்  மாவட்டம் திருவாலங்காடு ஆகிய இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டன. இதற்கிடையே, கடந்த 9 தேதி புதிய வளாகங்களில் சட்டக் கல்லூரிகள்  செயல்படத் தொடங்கின. இந்நிலையில், இடமாற்றத்திற்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  மாணவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், மாணவர்கள் புதிய கல்லூரி வளாகத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லை என்று தெரிவித்தனர்.  இதையடுத்து, புதிய கல்லூரி வளாகங்களுக்கு கூடுதல் பேருந்து வசதிகளை செய்து தருமாறு நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...