×

பா.ஜ.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை: நிதிஷ்குமார் பேட்டி

பாட்னா: தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க.வுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பீகார் முதல்வர்  நிதிஷ்குமார் கூறியுள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக விரைவில் பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்படும். மேலும் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் 12 தொகுதிகளிலாவது ஐக்கிய ஜனதா தளத்திற்கு கிடைக்கும் என அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 2ம் கட்ட மக்களவை தேர்தல்: அதிக...