×

லீவு-க்காக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் : சர்ச்சை நாயகன் பேச்சு

சிவகங்கை: விடுமுறை கிடைக்கும் என்பதற்காகவே மாணவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொள்ளையடித்தார் என்று அவர் பேசியதால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், இப்படி ஒரு கருத்தை கூறி தொடர்ந்து சர்ச்சை நாயகனாக நீடிக்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். சிவகங்கையில் நடைபெற்ற பொதுகூட்டம் ஒன்றில் பேசிய அவர் மேற்கண்ட சர்ச்சை பேச்சை பேசியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகமெங்கும் தீயாய் பரவிய சமயத்தில் குழந்தைகளும், மாணவர்களும் லீவு கிடைக்கும் என்பதற்காக போராட்ட களத்தில் குதித்ததாக குறிப்பிட்டார். இதனிடையே திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் மக்கள் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேசியிருப்பதும் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திரா காந்தி முதலமைச்சராக இருந்தார் என சுகாதார துறை அமைச்சர் பேசியிருந்தது கடும் விமர்சனத்திற்குள்ளானது. தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் பேசுவதாக நினைத்து கொண்டு உளறி கொட்டும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கொடைகானல் மேல்மலை கிராமங்களில் பயங்ககரமான காட்டுத் தீ