×

சேலம் எஸ்.பி. அலுவலகம் அருகே குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் : 3 பேர் கைது

சேலம்: சேலத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் நள்ளிரவில் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே அடுத்தடுத்த முன்று குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

குடோனில் தங்கியிருந்த மோகன், சுரேஷ், பீமாராவ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். வடமாநிலத்தவர்கள் சிலர் கடந்த 4 மாதங்களாக பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் காவல்துறை மற்றும் ஆளுங்கட்சியினரின் உதவியோடு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56...