×

டெல்லி அராஜகத்தை கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி கண்களை மூடிக்கொண்டு இருக்கிறார்: ராகுல் டிவீட்

புதுடெல்லி: ‘டெல்லியில் நடக்கும் குழப்பங்களை பிரதமர் மோடி கண்டுக் கொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டு இருக்கிறார்’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.  டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால், ‘டெல்லி அரசு எங்களை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்த வேண்டாம். தாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை’ என ஐஏஎஸ் அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

 இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவீட்டர் பதிவில், ‘ஆளுநர் அலுவலகத்தில் டெல்லி முதல்வர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். பாஜ.்வினர் முதல்வர் குடியிருப்பு அருகே தர்ணா போராட்டம் நடத்துகின்றனர். அதிகாரிகள் பேட்டி அளிக்கின்றனர். டெல்லியில் குழப்பம் நிலவுவதோடு, இயல்பு நிலையும் சீர் கெட்டுள்ளது. இவற்றை கண்டு கொள்ளாமல் பிரதமர் மோடி கண்களை மூடிக்கொண்டு இருக்கிறார். இதனால், டெல்லி மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நாடகம் நிறுத்தப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...