×

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய படகு

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அரிச்சல்முனை வடக்கு கடற்கரை பகுதியில் நேற்று காலை கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் படகு குறித்து மீனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்திய பதிவு எண் கொண்ட இப்படகில் 2 இயந்திரங்கள், டீசல் கேன்கள் இருந்தன.
விசாரணையில் இப்படகு குமரி மீன்வளத்துறை பதிவு பெற்றது தெரியவந்தது. பலத்த காற்று, கடல் சீற்றத்தினால் படகு கயிறு அறுந்து இழுத்து வரப்பட்டு கரை ஒதுங்கியிருக்கலாம் என்று அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். எனினும் படகை கடத்தலுக்கு பயன்படுத்தி விட்டு சென்றிருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...