×

விவசாய சமூகத்தின் நலனை பாதுகாப்பதே நமது முன்னுரிமை: எச்.டி.குமாரசாமி

பெங்களூரு: எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என கர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள எச்.டி.குமாரசாமி, கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள சாமூண்டீஸ்வரி ,குமாரசாமி இன்று சாமி தரிசனம் செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, பாஜகவினர் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என குற்றம்சாட்டினார். மேலும், எனது ஆட்சியை பாஜகவால் கவிழ்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என குமாரசாமி தெரிவித்துள்ளார். விவசாய சமூகத்தின் நலனை பாதுகாப்பதே நமது முன்னுரிமை என அவர் கூறியுள்ளார். உங்களின் பாதுகாவலனாக இருப்பேன் என சாமுண்டீஸ்வரி கோவில் முன்பு இருந்து சொல்கிறேன் என்றும் மக்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் நேரடியாக என்னிடமே வந்து சொல்லாம் எனவும் குமாரசாமி தெரிவித்துள்ளார். இன்று கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள எச்.டி.குமாரசாமி, அடுத்த நாளே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்