×

3 சாலை விபத்தில் 3 பேர் பலி

பெங்களூரு:  பெங்களூரு மாநகரத்தில் வெவ்வேறு சம்பவத்தில் மூன்று பேர் பரிதாபமாக இறந்தனர். பெங்களூரு பிரிதிநகர் பகுதியை சேர்ந்தவர் பவன்குமார் (19), இவர் ஆர்.எம்.சி. யார்டில் வேலை செய்து வந்தார். இதனால் தினமும் பைக்கில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் பைக்கில் வேலைக்கு சென்றார். இவர் ஸ்டுடியோ சாலை பெட்ரோல் பங்க் அருகே வந்துகொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த சிலிண்டர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ராஜாஜிநகர் போக்குவரத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி எம்.எஸ். ராமையா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: எலகங்கா நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (40). இவர் சம்பவத்தன்று காலை வேலை விஷயமாக பைக்கில் வெளியே சென்றார். அப்போது இவர் தொட்டபள்ளாபூர்-பெங்களூரு சாலையில் உள்ள அரலாலசந்திரா அருகே வந்துகொண்டு இருந்த போது வேகமாக வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அதே போல் மற்றொரு சம்பவம்: பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கெம்பாபுரா அக்ரஹாரா சிரஞ்சீவிநகர் பகுதியை சேர்ந்தவர் சேக்காலு (59). இவர் சம்பவத்தன்று காலை தனது சைக்களில் ராமையா மருத்துவமனைக்கு சென்றார். அப்போது இவர் மருத்துவமனையின் அருகே வந்த போது எதிரே வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...