×

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 6 டிஎஸ்பிகளுக்கு கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு

சென்னை:  6 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து உள்துறை ெசயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவு: கோயம்புத்தூர் மேற்கு போக்குவரத்து உதவி கமிஷனராக இருந்த மகுடபதி பதவி உயர்வு பெற்று கோயம்புத்தூர் நகர போக்குவரத்து திட்டமிடுதல் கூடுதல் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் ஆயுதப்படை டிஎஸ்பியாக இருந்த சோமசுந்தரம் பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர போக்குவரத்து திட்டமிடுதல் பிரிவு கூடுதல் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஆயுதப்படை டிஎஸ்பியாக இருந்த முருகேசன் பதவி உயர்வு பெற்று சென்னை டிஜிபி அலுவலக உணவு பாதுகாப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆயுதப்படை உதவி கமிஷனராக இருந்த முரளிதரன் பதவி உயர்வு பெற்று சென்னை கமாண்டோ படை பள்ளி கூடுதல் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.கோயம்புத்தூர் புறநகர் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பியாக இருந்த திருமாவளவன் பதவி உயர்வு பெற்று சென்னை ஆயுதப்படை கூடுதல் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.தேனி மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பி ஜெயராமன் பதவி உயர்வு பெற்று திருச்சி மாவட்ட ஆயுதப்படை கூடுதல் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த பதவி உயர்வுக்கான உத்தரவை உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி நேற்று  பிறப்பித்தார்.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...