கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மே மாதம் 1, 3, மற்றும் 5ம் தேதி என மூன்று கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. நீதிமன்ற வழக்குகளை தொடர்ந்து, தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர் கூறுகையில், “மேற்கு வங்க மாநிலத்தில் வருகிற மே 14ம் தேதி ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்” என்றார்.