பெங்களூரு: ஜிசாட்-11 செயற்கைகோளை ஏவும் திட்டத்தை இஸ்ரோ நிறுவனம் திடீரென ஒத்திவைத்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஜிசாட்-11 செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து அடுத்த மாதம் செலுத்த இஸ்ரோ நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இதற்காக சில வாரங்களுக்கு முன்பு தகவல் தொடர்பு செயலி அடங்கிய ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இந்த தகவல் தொடர்பு செயற்கைகோள் தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போய்விட்டது. இதனால், 5700 கிலோ எடை கொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோளை ஏவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் செயற்கைகோளை ஏவும் தேதியை இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ள அது ஜிசாட்-11 ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை.