சென்னை: ‘இட்லி கடை’ படத்துக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கி நடிக்க இருக்கிறார் தனுஷ். 1960-ல் நடப்பது போன்ற கதையைக் கொண்ட இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகிறது. முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படமாக இது உருவாகிறது. இதில் மிருணாள் தாக்கூர் ஹீரோயினாக நடிக்கிறார்.
சில மாதங்கள் முன் தனுஷ், மிருணாள் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அதை மிருணாள் தாக்கூர் மறுத்திருந்தார். இந்நிலையில் இருவரும் புதிய படத்தில் இணைவதாக வெளியான தகவல் இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
