- எஷா குப்தா
- ரிச்சா பனாய்
- துபாய்
- மோடி
- ஈரான்
- இஸ்ரேல்
- துபாய் சர்வதேச விமான
- அஜித் குமார்
- சோனல் சௌஹான்
- பாலிவுட்
துபாய்: ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் கடும் மோதல் மற்றும் ஏவுகணை தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. துபாயிலும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துபாய் சர்வதேச விமான நிலையம் தனது சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தாய்நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். நடிகர் அஜித் குமார், நடிகை சோனல் சவுகான் துபாயில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து மேலும் 2 பாலிவுட் நடிகைகள் பிரதமர் மோடிக்கு டிவிட்டர் மூலம் தங்களை காப்பாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியில் பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருப்பவர் இஷா குப்தா. இவர் துபாயிலிருந்து வெளியிட்ட டிவிட்டில், துபாயிலிருந்து எந்த விமானமும் செல்லாததால் இங்கே சிக்கியிருக்கிறேன். வெடிகுண்டு சத்தங்கள் உயிர் பயத்தை கொடுத்திருக்கிறது. பிரதமர் இதில் தலையிட்டு நானும் என்னைப் போல் இங்கு சிக்கியுள்ள இந்தியர்களும் பாதுகாப்பாக நாடு திரும்ப உதவ வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார். மற்றொரு பாலிவுட் நடிகை ரிச்சா பனாய் போட்டிருக்கும் பதிவில், தான் துபாயில் சிக்கி தவிப்பதாகவும், இந்த நேரத்தில் உதவ முடியாது என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறி உள்ளார். தன்னை காப்பாற்றும்படி பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதி இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
உயிர் தப்பிய சந்தோஷ் நாராயணன்
கத்தாரில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையால், அங்கிருந்து புறப்பட்ட கடைசி விமானத்தில் தப்பித்து அமெரிக்கா சென்றுள்ளதாக இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்கள் முழுமையாக மூடப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு, அங்கிருந்து புறப்பட்ட கடைசி கத்தார் விமானம் நான் பயணித்த விமானமாகத்தான் இருக்கும். அங்குள்ள (கத்தார்) எனது சகோதர, சகோதரிகளின் பாதுகாப்புக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். நான் பாதுகாப்பாக அமெரிக்கா வந்து சேர்ந்துவிட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
