ஐதராபாத்: தெலுங்கு நடிகர் சிவாஜி, சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடந்த திரைப்பட நிகழ்ச்சியில் பேசும்போது, ‘பெண்களின் அழகு சேலையில்தான் இருக்கிறது. அங்கங்கள் தெரியும்படி ஆடைகள் அணிவது மிகப்பெரிய பிரச்னைகளை வரவழைக்கும். ஹீரோயின்கள் கண்டபடி ஆடை அணிந்தால், நீங்கள்தான் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று பேசினார்.
அவரது அநாகரீகமான கருத்துக்கு பல்வேறு தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதை தொடர்ந்து, தனது பேச்சுக்கு சிவாஜி பகிரங்க மன்னிப்பு கேட்டார். அவரது கருத்துக்கு நடிகையும், தொகுப்பாளினியுமான அனசுயா பரத்வாஜ் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘யார் என்னென்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆடை என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம். சிவாஜியின் மனநிலையை பார்த்து நான் மிகவும் பரிதாபப்படுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அவர் சிவாஜிக்கு எதிராக சில கருத்துகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

