கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் கடந்த செப்டம்பர் மாதம் துவங்கி, நேற்று முன்தினம் முடிவடைந்தது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத் பகுதிகளில் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது. காமெடி, காதல், ஆக்ஷன் என படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் தாரா அலிஷா பெர்ரி நாயகியாக நடிக்கிறார்.
மற்றொரு நாயகியாக சுவாதி முப்பாலா நடிக்க, ஆனந்த்ராஜ், சௌகார் ஜானகி, ‘மொட்ட’ ராஜேந்திரன், சிவசங்கர், மனோகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். படத்தில் 30 நிமிட காட்சி 1980களில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. இதற்காக ஐதராபாத்தில் ரூ.80 லட்சம் செலவில் ஒரு அரண்மனை அரங்கம் அமைக்கப்பட்டது. 15 நாட்கள் படப்பிடிப்பு இதில் நடைபெற்றது. படத்துக்கு விரைவில் தலைப்பு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.