×

தமிழில் நடிக்க மறுத்தது ஏன்? - ஸ்ரத்தா கபூர்

பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர், சாஹோ படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். வரும் 30ம் தேதி படம் வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்த அவர் கூறியதாவது: சாஹோ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். ஹீரோ பிரபாஸ் மாதிரியே எனக்கும் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள்  இருக்கிறது. ஹாலிவுட் ஹீரோயின்களை போல் நானும் பறந்து, பாய்ந்து சண்டை போட்டுள்ளேன். சண்டை காட்சியில் நடித்தபோது நிறைய அடிபட்டு ரத்தம் சிந்தி இருக்கிறேன்.

இந்த படத்துக்கு நான் அதிக சம்பளம் வாங்கியதாக சொல்கிறார்கள். இது மிகப் பெரிய பட்ஜெட் படம் மட்டுமின்றி, பல மொழிகளில் உருவாகும் படமும் கூட. எனவே, சம்பளமும் அதற்கு ஏற்ற மாதிரிதான் இருக்கும். தென்னிந்திய மொழிகளில் நடிக்க, குறிப்பாக தமிழில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தது  உண்மை.

பாலிவுட்டில் இருந்து இங்கு வரும் நடிகைகள், முன்னணி ஹீரோக்களுடன் டூயட்டுக்கு ஆடுபவர்களாகவும், படத்தை அலங்கரிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதுபோன்ற கதைகள் வந்ததால்தான் நான் தமிழில் நடிக்கவில்லை. என்னை பொறுத்தவரையில், ஹீரோவை விட ஸ்கிரிப்ட்தான் முக்கியம். எனக்கு பொருத்தமான கதை மற்றும் கேரக்டருடன் எந்த டைரக்டர் வந்தாலும் சரி. எந்த ஹீரோவாக இருந்தாலும் அவருடன் இணைந்து நடிப்பேன்.

Tags :
× RELATED சிறகன் விமர்சனம்