குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.
- திருமங்கை ஆழ்வார்.
சின்ன காஞ்சிபுரம் என்று சொல்லக்கூடிய, கோயில்கள் நிறைந்த இடமான சென்னை- நங்கநல்லூரில், தில்லைகங்கா நகரில் அமைந்துள்ளது ஸ்ரீலட்சுமி ஸமேத ஸ்ரீசத்யநாராயண பெருமாள் திருக்கோயில். இந்த ஆலயத்தில் 28 - வது பிரம்மோத்சவம் ஸ்வஸ்தி, ஸ்ரீநிகழும் சுபகிருது வருடம் தை மாதம் 28-ஆம் தேதி சனிக்கிழமை (11-02-2023) முதல் மாசி மாதம் 8-ம் தேதி திங்கட்கிழமை (20-02-2023) வரை ஸ்ரீலட்சுமி ஸமேத ஸ்ரீசத்ய நாராயண பெருமாள் திருக்கோயிலில் மிக விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த பிரம்மோத்சவம் நிகழ்ச்சியில் எம்பெருமாள் காலை, மாலை என இருவேளையிலும் கீழ்க்கண்டவாறு உள்ள நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருளுகிறார்.
தோளுக்கினியான், சிம்ம வாகனம் முதல் யானை வாகனம் வரை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. மேலும், திருத்தேர், திருத்தேர் நடை - தோளுக்கினியான், வெண்ணெய் தாழி திருக்கோலம்-பல்லக்கு, குதிரை வாகனம், தீர்த்தவாரி - செல்வர் திருமஞ்சனம், கண்ணாடி பல்லக்கு, திருமஞ்சனம், புஷ்பயாகம் புண்ணியகோடி விமானம் என நடைபெறவுள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பெருமாளின் அருளை பெற வேண்டுகிறோம்.
தொகுப்பு: குடந்தை நடேசன்