சென்னை: கடந்த ஆண்டு தன்னுடைய மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்தை அறிவித்த ரவி மோகன், பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் தனக்கும், கெனிஷாவுக்கும் எந்தவொரு உறவும் இல்லை என்று ரவி மோகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் ரவி மோகன், கெனிஷா இருவரும் கைகோர்த்தபடி ஜோடியாக வந்தனர். அதை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும், ‘ரவி மோகன் சொன்னது பொய்யா?’ என்று கேட்டு பதிவிட்டனர். இதை தொடர்ந்து ரவி மோகன் குறித்து எமோஷனலான அறிக்கை ஒன்றை ஆர்த்தி வெளியிட்டார்.
தற்போது கெனிஷா அளித்துள்ள பேட்டி வைரலாகியுள்ளது. அவர் கூறுகையில், ‘நான் எனது சோல்மேட்டை கண்டுகொண்டேன். எனக்கு 2 சோல்மேட்ஸ் இருக்கின்றனர். அதில் ஒருவர், பெண். எங்களுக்கு இடையே நிறைய புரிதல்கள் இருக்கின்றன. சண்டை வராது. இன்னொரு சோல்மேட், எனது கண்களை திறந்திருக்கிறார். பாதுகாப்பு, அக்கறை உள்பட அத்தனையும் அவரிடம் இருக்கிறது. என்னை கஷ்டப்படுத்தாமல், என்னிடம் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கிறார். நான் சிறிது குழந்தைத்தனமான கேரக்டர். எப்போது நான்
இறப்பேன் என்று தெரியாது. இருக்கும் வரை வாழ்க்கையை என்ஜாய் பண்ண வேண்டும்.
யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டேன். என்னைப் பற்றி நெகட்டிவ் கமென்ட்ஸ் வருவது என் பிரச்னை இல்லை. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் சந்தோஷமாக இல்லை. அப்பழியை என்மீது சுமத்துகிறீர்கள். நமது மென்டல் ஹெல்த்தை நாம்தான் பார்க்க வேண்டும். அடுத்தவரிடம் கொடுத்தால் வீணாகிவிடும். அதை நான் யாருக்கும் தர மாட்டேன்’ என்றார்.
