×

இறந்தவர்களுடன் பேசுவதுபோல் கனவு கண்டால்அதற்கு என்ன பலன்?

நீங்கள் எந்த ஜாமத்தில் அந்த கனவினைக் கண்டீர்கள் என்பதைப் பொறுத்து பலன் என்பது மாறுபடும். பொதுவாக பகலில் உறங்கும்போது காணும் கனவிற்கு பலன் கிடையாது. இரவுப் பொழுதில் கடைசி  ஜாமத்தில் காணும் பலனிற்கு முழுமையான பலன் உண்டு. இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இறந்தவர் உங்கள் உறவினர் அல்லது நண்பர், நன்றாகத் தெரிந்த நபர்  எனும் பட்சத்தில் அவருக்குச் செய்ய வேண்டிய கடன் ஒன்று பாக்கி இருப்பதாகப் பொருள். அவர் உயிருடன் இருக்கும்போது நாம் அவருக்கு எதையோ ஒன்றைச் செய்கிறோம் என்ற உறுதியைத்  தந்துவிட்டு அதனைக் காப்பாற்ற இயலாமல் போயிருக்கலாம்.

அதனை நினைவிற்குக் கொண்டு வந்து அவருக்குச் சொன்ன வாக்கினை அவருடைய வாரிசுதாரர்கள் மூலமாக நிறைவேற்ற வேண்டும். அல்லது அவர் தனது வாரிசுகளுக்கு எதையோ ஒன்றைச் செய்ய  வேண்டி நம்மிடம் வேண்டுகோள் வைப்பதாகவும் பொருள் கொள்ளலாம். கனவில் வந்தவர்கள் நமது பெற்றோர்களாக இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடன்களை அவசியம்  செய்தாக வேண்டும். ஒரு சிலர் இறந்துபோன அரசியல் தலைவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டதாகச் சொல்வார்கள். இதெல்லாம் அவர்களது ஆழ்மனதில் உள்ள கற்பனையின் வெளிப்பாடே அன்றி  அதுபோன்ற கனவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?