×

அடை

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...
புழுங்கல் அரிசி - 1 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது),
பச்சரிசி - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது),
உளுத்தம் பருப்பு - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது),
துவரம் பருப்பு - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது),
பாசி பயறு - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது),
கொள்ளு - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது),
கடலைப் பருப்பு - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது),
வரமிளகாய் - 8,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

தாளிப்பதற்கு...


கொத்தமல்லி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது),
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்,
கசகசா - 1/2 டீஸ்பூன்,
தேங்காய் - 1/2 மூடி (துருவியது),
எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை:

முதலில் கொடுக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் பருப்புக்களை ஊற வைத்து நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும். அப்படி அரைக்கும் போது, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து மிகவும் மென்மையாக அரைக்காமல், ஓரளவிற்கு கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பிறகு அதில் கொத்தமல்லி, கசகசா சேர்த்து கிளறி, துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் பிரட்டி இறக்கி, அதனை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, தோசைகளாக ஊற்றி எடுத்தால், அடை தோசை தயார்.

Tags :
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்