×

சின்னமனூரில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

சின்னமனூர்: சின்னமனூரில் ஐயப்பனுக்கு ஆராட்டு மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. சின்னமனூரில் ஐயப்பனை சப்பரத்தில் ஏற்றி தேரடியிலிருந்து மார்க்கையன் கோட்டை, முல்லைப்பெரியாறு படித்துறைக்கு பக்தர்கள் கொண்டு சென்றனர். அங்கு ஐயப்பனுக்கு பேரிச்சம்பழம், தேன், பால், சந்தனம், தயிர் அபிஷேகம் நடத்தப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. அப்போது ஐயப்ப பக்தர்கள் ஆற்றில் நீராடி சரணம் கோஷம் எழுப்பி பஜனைகள் பாடப்பட்டது. மேலும் சப்பரத்தில் ஐயப்பனை ஊர்வலமாக சின்னமனூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். சின்னமனூர் ஐயப்ப சேவா பஜனை சங்கத்தின் நிர்வாகிகள் பெருமாள், லோகேந்திரராஜன், வடமலை சீனிவாசன், கனகசுந்தார், சிவமுருகேசன், ராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : ceremony ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா