×

சூலக்கல் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி மாவிளக்கு ஊர்வலமும், பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று மாலை முதல் நாள்  திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. சட்ட பேரவை துனைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபன்ன மன்றாடியார், முன்னாள் அமைச்சர் தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ முத்துகருப்பண்ணசாமி, கோவில் செயல் அலுவலர் சரவணபவன், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் பவனி இரண்டாவது நாளாக இன்றும், மூன்றாவது நாளாக நாளையும் நடக்கிறது. 27ம் தேதி அம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி