×

வில்லனாகவும் நடிப்பேன்: சொல்கிறார் சத்யா

சென்னை: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்தின் ஹீரோ சத்யா கூறியது: தப்புத்தண்டா படம் மூலம் நடிக்க வந்தேன். கடந்த டிச.29ம் தேதி வெளியான ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டாவது வாரத்தில் படத்துக்கான தியேட்டர்கள் அதிகரித்தது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்துக்கு தயாரிப்பாளர் வி.சத்தியமூர்த்தி செய்த விளம்பரமும் வெற்றிக்கு ஒரு காரணம்.

அடுத்ததாக மிர்சி சிவா நடித்த கோல்மால் படத்தை இயக்கிய பொன்.குமரன் இயக்கும் படத்திலும் கே.வி.ஆனந்த், நெல்சனின் உதவியாளர் நிகில் இயக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறேன். இவை இரண்டுமே பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களாகும். வில்லனாக நடிக்க ஆசைப்பட்டுதான், கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். காலம் என்னை ஹீரோவாக்கிவிட்டது. அதற்காக ஒரே மாதிரியாக நடிக்க மாட்டேன். வில்லனாக வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன். டைரக்டர்களின் நடிகனாக இருக்கவே விரும்புகிறேன். இவ்வாறு சத்யா கூறினார்.

The post வில்லனாகவும் நடிப்பேன்: சொல்கிறார் சத்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Satya ,Chennai ,Sathya ,Aahyavum mutluga ,mutlugu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மக்களவைத் தேர்தல் வாக்கு...