×

மின்வயரில் திடீர் தீ விவசாயி படுகாயம்

 

தாராபுரம், ஆக. 1: குண்டடம் அருகே உள்ள குப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (65), விவசாயி. நேற்று பிற்பகல் இவர், தனது வீடு அருகே உள்ள தோட்டத்து கிணற்றின் மின்மோட்டாரை இயக்கியபோது எதிர்பாராத விதமாக மோட்டாருக்கு செல்லும் வயர்கள் தீப்பிடித்து எரிந்தது.

இந்த தீ, கருப்பண்ணன் மீதும் பற்றியது. இதில், உடல்கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலின்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post மின்வயரில் திடீர் தீ விவசாயி படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Tarapuram ,Karuppannan ,Kuppanayakkanpatti ,Kundadam ,Dinakaran ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்