விருத்தாசலம், ஜூலை 17: விருத்தாசலம் பகுதியில் கோடை வெப்பம் காரணமாக கடந்த சில தினங்களாக தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்த நிலையில், நேற்று மாலை திடீரென மழை பெய்தது. இதில் விருத்தாசலம் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி பொது மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து விருத்தாசலம் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி, ஜங்ஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேருந்து நிலையம் மற்றும் பேருந்து நிலையம் வெளியே செல்லும் ஜங்ஷன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பேருந்துகள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு மழை நீர் வடிந்ததும் வாகனங்கள் செல்லத் தொடங்கின.
The post கனமழையால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.
