போடி, ஜூலை 17: போடி அருகே உள்ள சுந்தரராஜபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அருண் (41). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுவர். தற்போது சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இவர் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் உள்ள ஒரு மதுபாருக்கு சென்றார். அங்கு ஏற்கனவே சுந்தரராஜபுரம் மதுரை வீரன் தெருவை சேர்ந்த மாணிக்கம், இவரது தம்பி ஜெயவீரன் ஆகியோர் இருந்தனர். இதையடுத்து 3 பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென அருண் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மாணிக்கம், ஜெயவீரன், மதுபாரில் பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்த பணத்தை திருடியதாகக் கூறி அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் அவரது கையில் கத்தியால் குத்தி கொலைமிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த அருணுக்கு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள சகோதரர்களை தேடி வருகின்றனர்.
The post ராணுவ வீரருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.
