×

வேதாரண்யம் அருகே பன்னாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்க விழா

 

வேதாரண்பம், ஜூலை 14: வேதாரண்யம் தாலுகா பன்னாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் மகிழ்முற்றம் தொடக்க விழா நடைபெற்றது விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் குமணன் மகிழ் முற்றம் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவி பிரியா காளிதாசன் மகிழ் முற்ற மாணவத் தலைவர்களுக்கு வண்ணக் கொடிகள் வழங்கி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் குழுத்தலைவர்களாக ரமேஷ்குமார், வேம்பையன், வீரமணி, தர்மதுரை, சித்ரா, காவியா ஆகியோர் பொறுப்பேற்ற்றுக் கொண்டனர். விழாவில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post வேதாரண்யம் அருகே பன்னாள் அரசு உயர்நிலைப் பள்ளியில் மகிழ் முற்றம் தொடக்க விழா appeared first on Dinakaran.

Tags : Magizh ,Muthram ,Pannal Government High School ,Vedaranyam ,Magizh Muthram ,Pannal Government ,High ,School ,Mohanasundaram ,President ,Parent- ,Teacher ,Association ,Kumanan ,Magizh Muthram.… ,Pannal ,Government ,Dinakaran ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா