கம்பம்: கம்பத்தில் முன்னாள் ராணுவத்தினர், ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து, முப்படைகளுக்கும் நன்றி தெரிவித்து ஊர்வலம் சென்றனர். கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், கம்பம் நகரில் முன்னாள் ராணுவத்தினர் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி விழா ஊர்வலம் நடத்தினர். இதில் முப்படையினருக்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
கம்பம் மற்றும் கேகே பட்டியை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில் தலைவர் சேதுராமன் தலைமையில் கம்பம் வாரச்சந்தை அருகே தொடங்கிய இந்த ஊர்வலம் எல்.எப்.ரோடு வழியாக கம்பம் மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை வரை சென்று நிறைவடைந்தது.ஊர்வலத்தின் போது முன்னாள் ராணுவத்தினர், தேசத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் முப்படைகளுக்கும் நன்றி தெரிவித்து ஜெய்ஹிந்த் கோஷம் எழுப்பியவாறு தேசியக் கொடிகளை ஏந்தி சென்றனர். நிகழ்ச்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொண்டனர்.
The post முன்னாள் ராணுவத்தினர் சார்பில் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி விழா: கம்பத்தில் நடைபெற்றது appeared first on Dinakaran.
