- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- அலவன்
- விழுப்புரம்
- விடுதலை சிறுத்தை கட்சி
- திருச்சிதம்பலம் கூட்ரோடு
- விலாப்புபுரம்
- திருமாவளவன்
- காஷ்மீர்
- ஜெடிவாரி
- திருமாலவன்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தென்கிழக்கு மாவட்ட முகாம் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: காஷ்மீரில் நடந்த பயங்கரவாதம் இனி தொடராமல் இருக்க வேண்டுமானால் இந்தியர்கள் அனைவரும் மதம் கடந்து, சாதி கடந்து சகோதரர்களாய் ஒருங்கிணைய வேண்டிய தேவை உள்ளது. ஆளுநர் ரவி தன்னை மாற்றிக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஒன்றிய அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்க பாமக தலைவர் அன்புமணி ஏன் தயங்குகிறார்? இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்குதான் இருக்கிறது. தமிழக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுகள் மற்றும் நீதிமன்றம் அமைச்சர்களுக்கு எதிராக வழங்கும் தீர்ப்புகள் குறித்து முதலமைச்சர் உரிய முடிவு எடுப்பார். நடவடிக்கை எடுப்பார். கோவையில் விஜய் கட்சியை வளர்க்க சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். வளரட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதானி, அம்பானி பங்களா கட்டத்தான் 370 சட்டப்பிரிவு நீக்கம்
திண்டிவனத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது: துப்பாக்கி சூடு நடந்த காஷ்மீருக்கு போகாமல் பீகாருக்கு சென்று மோடி தேர்தல் பரப்புரையை மேற்கொள்கிறார். 26 உயிரிழப்புகளை விட தேர்தல் பரப்புரை முக்கியமா? அரசியலமைப்பு சட்டம் 370ஐ நீக்கிய பிறகு காஷ்மீரில் அமைதி நிலவி வருகிறது என பாஜ அரசு தெரிவித்தது. ஆனால் அங்கு அமைதி நீடிக்கவில்லை.
ஜம்மு காஷ்மீரில் அதானி அம்பானி பங்களாக்கள் கட்டவும், வணிகம் செய்யவும் தான் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியிலிருந்து விசிகவை வெளியேற்ற எவ்வளவோ சதி வேலைகள் செய்து பார்த்தார்கள். தேர்தல் நேரத்தில் சில பேர் கூட்டம் கூட்டி காண்பிப்பார்கள். அது தேர்தலில் பேரம் பேசுவதற்காக செய்வார்கள். மதச்சார்ப்பின்மையை காப்பாற்ற மே 31ம் தேதி திருச்சியில் விசிக சார்பில் வக்பு சட்டத்திற்கு எதிராக மாநாடு நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
The post ஜாதிவாரி கணக்கெடுப்பு; ஒன்றிய அரசை கேட்கஅன்புமணி தயக்கம் ஏன்..? திருமாவளவன் கேள்வி appeared first on Dinakaran.