- திருத்தணி காவல் நிலையம்
- திருத்தணி
- சுதாகர்
- சுப்பிரமணியபுரம் ரயில்வே கோர்ட் தெரு
- திருத்தணி-அரக்கோணம் சாலை
திருத்தணி, ஏப்.18: திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள சுப்பிரமணியபுரம் ரயில்வே கோட்ரஸ் தெருவில் சுதாகர் (41) என்பவர், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர், திருமண மண்டபங்களில் பூ அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், சுதாகர் கடந்த 15ம் தேதி காலை அவரது மகனை பள்ளியில் விடுவதற்காக பைக்கில் சென்றார். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை இந்திரா நகர் காவல் நிலையம் அருகே உள்ள கல்குவாரியில் ஒரு பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், குட்டையில் மூழ்கிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணை நடத்தியதில், குட்டையில் இறந்து கிடந்தது கடந்த 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன ெதாழிலாளி சுதாகர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சுதாகர் சடலத்தை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொழிலாளி சுதாகர் குடிபோதையில் குட்டையில் தவறி விழுந்து இறந்தாரா, அல்லது மர்ம நபர்கள் யாரேனும் அடித்துக்கொலை செய்துவிட்டு உடலை குட்டையில் வீசிச் சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருத்தணி காவல் நிலையம் அருகே தொழிலாளி அடித்து கொலையா? குட்டையில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.