×

சாலை விபத்தில் உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு

சென்னை: முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த தமிழ்ச்செல்வன் (வயது 57) என்பவர் 13.3.2025 அன்று பணியின் நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் மாவட்ட காவல் அலுவலகம் எதிரில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நான்குசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 24.3.2025 அன்று மாலை உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழ்ச்செல்வனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post சாலை விபத்தில் உயிரிழந்த எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief MLA ,Gausthal ,Chennai ,Mudhalvar ,Kastalin ,Tamitselvan ,Social Justice and Human Rights Division ,Viluppuram ,District ,Stalin ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்