×

கார்த்திகை கடைசி செவ்வாய் சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் திருக்கோயிலில் கார்த்திகை மாத இறுதி செவ்வாய்க் கிழமை என்பதால் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2மணி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

இதில் கார்த்திகை மாத இறுதி செவ்வாய்க் கிழமையான நேற்று சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோயிலுக்குள் வந்து சுமார் 2மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

The post கார்த்திகை கடைசி செவ்வாய் சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Karthikai ,Siruvapuri Murugan temple ,Periyapalayam ,Sami ,Balasubramanya ,Swamy Temple ,Siruvapuri ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகள்...