×

கார் விபத்தில் சிக்கிய பொன்னியின் செல்வன் பாடகி

சென்னை: ‘பொன்னியின் செல்வன்’ பட பாடகி ரக்‌ஷிதா சுரேஷ் சாலை விபத்தில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘காதோடு சொல்’ என்ற பாடலையும் ‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் கன்னட பதிப்பில் ஒரு பாடலையும் ரக்‌ஷிதா சுரேஷ் பாடியுள்ளார். மேலும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்பட சில படங்களிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார். சினிமா பாடல்கள் மட்டுமின்றி, பல்வேறு இசை ஆல்பங்களிலும் அவர் பாடியிருக்கிறார்.

இவர் மலேசியா செல்வதற்கு விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தான் சென்ற காரில் ஏர்பேக் வசதி இருந்ததை அடுத்து அந்த காரில் சென்ற தான் உள்பட சக பயணிகள் அனைவரும் லேசான காயத்துடன் உயிர் பிழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வளவு பெரிய விபத்து நடந்தும் தான் உயிர் பிழைத்தது தனது அதிர்ஷ்டமே என்றும் கடவுளுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் அவருக்கு பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post கார் விபத்தில் சிக்கிய பொன்னியின் செல்வன் பாடகி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Ponni ,Chennai ,Rakshitha Suresh ,Ponniin Selvan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...