×
Saravana Stores

இலங்கை கடற்படை கைது செய்துள்ள 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நாகப்பட்டினத்தை சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுகின்றனர். இத்தகைய கைது நடவடிக்கைகள், இந்தியா-இலங்கை இடையிலேயான ஆக்கப்பூர்வமான தூதரக முயற்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு முக்கியப் பிரச்னையாக மாறியுள்ளது.

மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த 26ம் தேதி படகில் மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024ம் ஆண்டில் மட்டும் இதுபோன்று 30 சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 27ம் தேதி நிலவரப்படி 140 மீனவர்கள் மற்றும் 200 மீன்பிடி படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளனர். எனவே, இந்த பிரச்னையை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துச் சென்று, இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post இலங்கை கடற்படை கைது செய்துள்ள 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Chief Minister ,M.K.Stal ,Minister ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Union External Affairs ,Jaishankar ,Nagapattinam ,Minister of External Affairs ,
× RELATED இலங்கை கடற்படை கைது செய்த 16 ராமேஸ்வரம்...