×
Saravana Stores

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 1,279 பேருக்கு ரூ.372.06 கோடி வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2022 டிசம்பர் 2023 மார்ச்சுக்குள் ஓய்வுபெற்ற 1279 பேருக்கு பி.எப்., பணிக்கொடை ஒப்படைப்பு தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வெளியான அறிக்கையில்; “தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.372.06 கோடி வழங்கிட கருணை உள்ளத்தோடு நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3414 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கிட 29/03/2023 அன்று உத்தரவிட்டார்.

அதன்படி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஏப்ரல்-2022 முதல் நவம்பர்-2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற / இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3414 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கடும் நிதி நெருக்கடியிலும், தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட, தமிழ்நாடு முதலமைச்சர் கருணை உள்ளத்தோடு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் 1279 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்கிறேம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.372.06 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,Government of Tamil Nadu ,Chief Minister ,Stalin ,Dinakaran ,
× RELATED அக்.31 தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள்...