×
Saravana Stores

சிலிண்டர் வெடித்து வீடு எரிந்தது: பெண் படுகாயம்

திருவொற்றியூர்: சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் படுகாயம் அடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை திருவொற்றியூர் ராஜா சண்முகம்நகர் பகுதியை சேர்ந்தவர் அமுதா (52). இவரது கணவர் பாலன் சில ஆண்டுகளுக்கு இறந்துவிட்டார். இவரது மகன் வெங்கட்ராஜ் திருமணமாகி மாத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் அமுதா, தனது தாய் லட்சுமியுடன் இட்லி மாவு விற்பனை செய்கிறார்.

நேற்றிரவு வீட்டில் சமையல் செய்தபோது சிலிண்டர் வெடித்து சிதறியது தீ பரவி அமுதா உடல் கருகி வலியால் கதறி துடித்தார். சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீட்டின் ஓடுகள் உடைந்து சிதறின. சத்தம் கேட்டு வெளியில் அமர்ந்திருந்த மகன் வெங்கட் ராஜ், லட்சுமி ஆகியோர் ஓடி வந்து பலத்த தீக்காயம் அடைந்த அமுதாவை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சாத்தங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

The post சிலிண்டர் வெடித்து வீடு எரிந்தது: பெண் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Amuda ,Tiruvottiyur Raja Shanmugamnagar ,Chennai ,Balan ,
× RELATED சென்னை திருவொற்றியூர் பள்ளியில் வாயு கசிவு: 35 மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு