×
Saravana Stores

ஒன்றிய அரசு பணியில் இருந்து திரும்பிய ஐபிஎஸ் அதிகாரிகள் 2 பேருக்கு பணி: உள்துறை செயலாளர் உத்தரவு

சென்னை:  ஒன்றிய அரசு பணியில் இருந்து திரும்பிய 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணி வழங்கி உள்துறை செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரிகளான அனிசா ஹுசைன் மற்றும் சர்வேஷ்ராஜ் ஆகியோர் தமிழக காவல்துறையில் இருந்து ஒன்றிய அரசு பணிக்கு சென்றனர். ஒன்றிய அரசு பணியில் இருந்து திரும்பிய இந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ் குமார் பணி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தீரஜ்குமார் நேற்று பிறப்பித்த உத்தரவில், “ஒன்றிய அரசு பணியில் இருந்து திரும்பிய அனிசா ஹுசைன் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாகவும், சர்வேஷ் ராஜ் மாநில காவல்துறை நவீன கட்டுப்பாட்டு அறை எஸ்பியாகவும் நியமனம் செய்யப்படுகிறார்” என்று கூறியுள்ளார்.

The post ஒன்றிய அரசு பணியில் இருந்து திரும்பிய ஐபிஎஸ் அதிகாரிகள் 2 பேருக்கு பணி: உள்துறை செயலாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Chennai ,Home Secretary ,Dheeraj Kumar ,Union government service ,Tamil ,Nadu Cadre ,Anisa Hussain ,Sarveshraj ,Tamil Nadu Police ,Dinakaran ,
× RELATED எங்கள் கூட்டணிக்குள் விவாதம் உண்டு,...