×
Saravana Stores

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து: 20 பயணிகளுக்கு பலத்த காயம்

அமராவதி: ஆந்திர மாநிலம் கடப்பா அருகே அரசு பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தில் இருந்து கடப்பா மாவட்டத்திற்கு அரசு பேருந்து 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திடீரென எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 30 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

உடனடியாக அங்கிருந்த போலீசார், பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் இணைந்து பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளையும் பத்திரமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் காயமடைந்த இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் பிரசாத் காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

The post ஆந்திர மாநிலம் கடப்பா அருகே 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து: 20 பயணிகளுக்கு பலத்த காயம் appeared first on Dinakaran.

Tags : AP ,Kadapa ,Amravati ,Kadapa, AP ,government ,Srisatya Sai district ,Kadapa district ,Dinakaran ,
× RELATED வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால்...