×
Saravana Stores

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கோத்தகிரி, அக்.22: கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, புகையிலை பொருட்கள் புழக்கத்தில் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நீலகிரி காவல் கண்காணிப்பாளர் நிஷா அறிவுறுத்தலின் படி குன்னூர் டிஎஸ்பி தலைமையில் கோத்தகிரி ஆய்வாளர் ஜீவானந்தம், உதவி ஆய்வாளர்கள் வணக்குமார், யுவராஜ் தலைமையில் காவலர்கள் சுரேந்தர், மகேந்திரன், கௌதம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள கொட்டக்கம்பை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருநிறைச்செல்வன் (44), கோபிநாத் (29), அகில் (24) ஆகியோர், சுமார் 500 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Nilgiri ,Superintendent ,Nisha ,Coonoor ,DSP ,Jeevanandam ,
× RELATED கோத்தகிரியில் 4-வது நாளாக மழை கொட்டித்...