×
Saravana Stores

கபிஸ்தலத்தில் மரம் வெட்டும்போது தவறி விழுந்து வாலிபர் பலி

கும்பகோணம், அக்.23: தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள மேலகபிஸ்தலம், மெயின் ரோட்டில் வசிப்பவர் பெரியசாமி மகன் சுதாகர்(48); மரம் வெட்டும் கூலி. இவருக்கு, திருமணமாகி மங்களம் என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ராமானுஜபுரத்திற்கு வேலைக்கு சென்றவர், ஒரு மரத்தில் ஏறி கிளையை வெட்டியபோது, கால் தவறி கீழே விழுந்து, படுகாயமடைந்தார்.

அவரை, உடனடியாக மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தபோது, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து, அவரது மனைவி மங்களம் கொடுத்த புகாரின்பேரில், கபிஸ்தலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

The post கபிஸ்தலத்தில் மரம் வெட்டும்போது தவறி விழுந்து வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Periyaswamy ,Sudhakar ,Main Road, Melakapistalam ,Kapistalam, Thanjavur district ,Mangalam ,Ramanujapuram ,
× RELATED கும்பகோணம் சார்ங்கபாணிப் பெருமாள்