×
Saravana Stores

வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை


வேலூர்: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் தொடர் மழையினால் மாடுகள் விற்பனை டல்லடித்தாலும், கோழிகள் விற்பனை களைக்கட்டியது. வேலூர் அடுத்த பொய்கையில் வழக்கம்போல் இன்று நடந்த மாட்டுச்சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. தற்போது மழை பெய்து வருவதால் தீவனங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது. இதனால் கால்நடைகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில், தொடர் மழையினால் இன்றும் கடந்த வாரத்தை போலவே பொய்கை மாட்டு சந்தைக்கு 50 சதவீதம் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் விற்பனையும் ரூ40 லட்சம் வரை இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பொய்கை மாட்டுச்சந்தையில் நாட்டுக்கோழி குஞ்சுகள் ரூ100 முதல் ரூ250 வரையும், சண்டைக்கோழி ரூ2 ஆயிரம் முதல் ரூ5 ஆயிரம் வரையும், வான்கோழி ரூ1,100 முதல் ரூ2 ஆயிரம் வரையும் விற்பனையானது. அதேபோல் வாத்து ஒன்று ரூ500 முதல் ரூ800 வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று பொய்கை மாட்டு சந்தைக்கு வரத்து பாதியாக குறைந்து. ரூ40 லட்சத்துக்கு விற்பனையானது. அதேநேரத்தில் பிற கால்நடைகள் விற்பனை களைக்கட்டியது. மேலும் மாட்டு சந்தை பகுதி முழுவதும் சேறும் சகதியும் மாறியதால் விவசாயிகள், வியாபாரிகள் அவதிப்பட்டனர். அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். ஆனால் நிறைவேற்றிய பாடில்லை’ என்றனர்.

The post வேலூர் அடுத்த பொய்கை சந்தையில் சண்டை கோழிகள் ரூ5 ஆயிரம் வரை விற்பனை appeared first on Dinakaran.

Tags : Lie Market ,Vellore ,Tirupathur ,Ranipetta ,Thiruvallur ,Krishnagiri ,Dharumpuri ,Salem ,Andhra ,
× RELATED ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...