×
Saravana Stores

திருப்போரூர் அருகே குட்கா விற்ற 2 பேர் கைது: போலீசார் விசாரணை

திருக்கழுக்குன்றம்: திருப்போரூர் அருகே பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்த பெண் உட்பட 2 பேரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்போரூர் அடுத்த சிறுகுன்றம் கிராமத்தில் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருப்போரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று சிறுகுன்றம் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் போலீசார் சேதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, 2 பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.இதனையடுத்து, 2 பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்களை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் (58), கோமளா (49) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 6 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், கைதான 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்போரூர் அருகே குட்கா விற்ற 2 பேர் கைது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags :
× RELATED வழக்கு விசாரணைக்கு துப்பாக்கியுடன் நீதிமன்றம் வந்த ரவுடி