×
Saravana Stores

மும்பையில் இருந்து வாங்கி வந்து போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

சென்னை: மும்பையில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் 427 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை நடப்பதாக ராயப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் பீட்டர்ஸ் சாலை, கேரன்ஸ் சாலை சந்திப்பு அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (23), விஜி (22) என்பதும், இவர்கள் ரயில் மூலம் மும்பை சென்று, மொத்தமாக போதை மாத்திரைகளை கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மும்பையில் ரூ.30க்கு வாங்கிய போதை மாத்திரையை ரூ.300 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்து, அந்த பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் 427 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post மும்பையில் இருந்து வாங்கி வந்து போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mumbai ,CHENNAI ,Ganja ,
× RELATED வேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண் கைது: போலீசார் விசாரணை