×
Saravana Stores

சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியை தேர்வு வாரிய தலைவராக நியமிக்க முடியாது என்று வாதிட்டார். அப்போது, இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராக உள்ளதாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இந்த மனுவுக்கு அக்டோபர் 25ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஒன்றிய மற்றும் தமிழக அரசுக்களுக்கும் சுனில்குமாருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

The post சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGP ,Sunilkumar ,Uniform Staff Selection Board ,Union ,CHENNAI ,Tamil Nadu government ,Sunil Kumar ,Tamil Nadu Uniformed Staff Selection Board ,AIADMK ,Inpadurai Chennai ,IC ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.பாரதி மீது யூடியூபர் சங்கர்...