×
Saravana Stores

திமுக இளைஞரணி சார்பில் நடைபெற இருந்த பேச்சுப்போட்டி நிறைவு நிகழ்ச்சி பரிசளிப்பு விழா தள்ளிவைப்பு: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞரணி சார்பில் நடைபெற இருந்த பேச்சுப்போட்டி நிறைவு நிகழ்ச்சி, பரிசளிப்பு விழா தள்ளிவைக்கப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க. இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, திமுக இளைஞர் அணி நடத்தும் ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப்போட்டி மாவட்ட மற்றும் மண்டல அளவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

மாநில அளவிலான இறுதிப் போட்டி நாளை (19ம் தேதி) அன்றும், பரிசளிப்பு விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (20ம் தேதி) அன்றும் சென்னையில் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம். தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்துள்ள சூழலில் போட்டியாளர்களின் நலன் கருதி, இரு நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்துள்ளோம். மாநில அளவிலான இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக இளைஞரணி சார்பில் நடைபெற இருந்த பேச்சுப்போட்டி நிறைவு நிகழ்ச்சி பரிசளிப்பு விழா தள்ளிவைப்பு: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Assistant Secretary ,Stalin ,Chennai ,Udayaniti Stalin ,Dimuka Youth ,Youth Secretary ,Deputy First Minister ,Award ,Dimuka Youngarani ,Dinakaran ,
× RELATED திமுக இளைஞர் அணி சார்பில் பேச்சு...