×
Saravana Stores

விஷ மாத்திரை கொடுத்து 2 குழந்தைகளை கொன்று ஏட்டு மனைவி தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை


சேலம்: சேலத்தில் போலீஸ் ஏட்டு மனைவி, குடிநீரில் விஷ மாத்திரைகளை கலந்து கொடுத்து 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மீதான சந்தேக சண்டையில் இந்த விபரீத முடிவை எடுத்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் கோவிந்தராஜ்(38). சேலம் அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா(34), இவர்களது மகன் ரோகித்(7), மகள் தர்ஷிகா(5). நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ரோகித் 3ம்வகுப்பும், தர்ஷிகா எல்கேஜியும் படித்து வந்தனர். நேற்று காலையில் வேலைக்கு சென்ற கோவிந்தராஜ், இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு சாத்திவைக்கப்பட்டிருந்தது.

திறந்து பார்த்தபோது அங்கு 2 குழந்தைகளும் இறந்து கிடந்தனர். மனைவி சங்கீதா அருகில் தூக்கில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ், சத்தம்போடவே அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அந்நேரத்தில் ஏட்டுவும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை பக்கத்து வீட்டினர் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து சென்று தாய் மற்றும் 2 குழந்தைகளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், 2 குழந்தைகளுக்கு விஷ மாத்திரைகளை குடிநீரில் கரைத்து ெகாடுத்து கொன்றுவிட்டு, அதன்பிறகு சங்கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து துணை கமிஷனர் வேல்முருகன் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். குழந்தைகளை கொன்றுவிட்டு, தற்கொலை செய்து ெகாள்வதற்கான காரணம் என்ன? எனவும் விசாரணை நடத்தினார். மனைவி குழந்தைகளை இழந்த ஏட்டு கோவிந்தராஜ், பித்துபிடித்தவர் போல இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. முதற்கட்ட விசாரணையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுமாம். இருவரும் சத்தம்போட்டு சண்டையில் ஈடுபவதும் தெரியவந்துள்ளது. ஏட்டு கோவிந்தராஜ் மீது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் இந்த சம்பவம் நடத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விஷ மாத்திரை கொடுத்து 2 குழந்தைகளை கொன்று ஏட்டு மனைவி தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED ஓடை, கால்வாய்களில் தூர்வாரும் பணி தீவிரம்